கடலோர மக்களுக்கு விழிப்புணர்வு – நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

rajini-speech-video-1

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘கூலி, ஜெயிலர் 2’ படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடலோர கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் CISF வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவர் கையெடுத்து கும்பிட்டு உருக்கமான வேண்டுகோள் விடுத்து ஒரு முக்கியமான வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

*”நம் நாடு மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து கோரச் சம்பவங்களை நடத்தலாம். இதற்கு மிகுந்த உதாரணம் 26/11 மும்பை தாக்குதல், இதில் 175 பேரின் உயிரிழப்பு நிகழ்ந்தது.

கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்குரியோர் நடமாடினால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த, CISF வீரர்கள் 100 பேர், மேற்குவங்கத்திலிருந்து கன்னியாகுமரி வரை சுமார் 7,000 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்கள். அவர்கள் உங்கள் பகுதியில் வந்தால், அவர்களை வரவேற்று, அவர்களுடன் சில தூரம் பயணித்து உற்சாகப்படுத்துங்கள்.

நன்றி! வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள். ஜெய் ஹிந்த்!”*

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *