குட் பேட் அக்லி: திருச்சி ஸ்ரீதர் பேசிய தகவல் வைரல்!
அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவரும் நிலையில், படத்தை சுற்றியுள்ள செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் ப்ரீமியர் ஷோ நடைபெறவுள்ளதாக கூறப்பட்டு, பின்னர் அது ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த நிலையில், திருச்சி ஸ்ரீதர் பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், மலேசியாவில் அவரது நண்பர் ஒருவர் சென்சார் காட்சியை பார்த்ததாக கூறியுள்ளார். படம் சிட்டிசன், தீனா, பில்லா, மங்காத்தா ஆகிய அஜித் படங்களின் கலவையாக இருக்கும் என்றும், ரசிகர்களுக்கு மிகுந்த திருப்தி அளிக்கும் வகையில் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
படம் வெளியாகியவுடன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி உறுதி என திருச்சி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.